Thursday, July 9, 2026
No menu items!

Tamil Vani

இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – கனடா!!

கனடாவில் விமானப் பயிற்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனிடோபா (Manitoba) - ஸ்டெயின்பாக் (Steinbach) பகுதியில், விமானம் ஓட்டும் பயிற்சி மையம் ஒன்றில், குறித்த இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வின்னிபெக்கில் (Winnipeg) இருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில்,...

மீண்டும் அதிகாரபூர்வ கடிதத்தை வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்..!!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கான, தனது அதிகாரபூர்வ கடிதத்தை மீண்டும் வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை ஜனாதிபதி அனுரவின் பெயரை "அருண" என்று தவறாக ஆரம்பக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தமை, இந்த கடிதத்தில் திருத்தப்பட்டுள்ளது. 2025, ஜூலை 9, திகதியிட்ட திருத்தப்பட்ட கடிதம், ஆகஸ்ட் 1 முதல், இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி...

அமெரிக்கா செல்ல இருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்க அரசு விசா நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், விசா கட்டணத்தையும் இரண்டரை மடங்கு அளவுக்கு உயர்த்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றதில் இருந்து விசா வழங்குவதில் பல நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் அரசு செலவீனம் தொடர்பான மசோதா சமீபத்தில் நிறைவேறியது. இதற்கு ஜனாதிபதி...

முன்னரே விற்றுத் தீர்ந்த இலங்கை-பங்களாதேஷ் முதல் T20 போட்டிக்கான டிக்கெட்டுகள்..!

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இன்று (10) நடைபெறவிருக்கும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, டிக்கெட் விற்பனை நிலையங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், விற்பனைக்கு இனி டிக்கெட்டுகள் எதுவும் இல்லை என்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. டிக்கெட்...

ஹட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த சிறுவனின் சடலம் மீட்பு..!!

ஹட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது சிறுவன் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக   ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  ‌ செவ்வாய்க்கிழமை (08) அன்று மாலை  நண்பர்களுடன் சிங்கமலை குளம் பகுதிக்கு  புகைப்படம் எடுக்க சென்ற போது தவறி விழுந்து காணாமல் போயுள்ளார் கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக...

விமானம் ஒன்று வீழ்ந்ததில் 2 பேர் பலி..!!

இந்தியா - ராஜஸ்தான் பகுதியில் இன்றைய தினம்(09), இந்திய விமானப்படையின் போர் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி, விமானி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். குறித்த விமானம் வான்வெளியில் தடுமாறியபடி பறந்து, வயல்வெளியில் வீழ்ந்து நொறுங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேவேளை, விமான விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் எதிரணி -அமைச்சர் !!

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அமைச்சர் தமிழ் மொழியில் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மேலும் கூறுகையில், எனது தாய் மொழி...

நிரம்பி வழியும் நாட்டின் சிறைச்சாலைகள்..!!

நாட்டின் சிறைச்சாலைகளில் 12,000  ஆம் கைதிகளை அடைக்க முடியும் என்றாலும், அற்றில் 33,000 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திணைக்களத்தில் சிறைச்சாலை அதிகாரிகளின் பற்றாக்குறையும் இருப்பதாகக் கூறினார். சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு) - சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்...

மலேசியா செல்கிறார் விஜித ஹேரத்..!!

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  வியாழக்கிழமை (10) மலேசியா செல்லவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் விஜித ஹேரத் இந்த விஜயத்தின் போது ஆசிய அமைச்சர்கள் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார். இதன் போது...

நரம்பியல் வைத்திய நிபுணரின் மகள் பிணையில்..!!

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நரம்பியல் வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் மகள், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

About Me

928 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...
- Advertisement -spot_img