Monday, May 25, 2026
No menu items!

வர்த்தகம்

குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்..!

மின்  கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 30க்கும் குறைந்த மின்சார அலகுகளுக்கான கட்டணம் 33 சதவீதத்தினாலும் 31 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணம் 28 சதவீதத்தாலும்  61 முதல் 90 வரையான அலகுகளுக்கான கட்டணம் 30 சதவீதத்தினாலும் குறைக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன்  90 முதல் 180 வரையான அலகுகளுக்கு...

எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் நேற்று (04) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி 95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 447 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 458 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  92 ரக பெற்றோல், மற்றும்...

மின்சார சபைக்கு கிடைத்துள்ள இலாபம்..!

இலங்கை மின்சார சபை 2023 ஆம் ஆண்டிற்கான அபரிதமான இலாபத்தை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 டிசம்பர் 31ஆம் திகதியன்று கணக்காய்வு அறிக்கையின்படி 61.2 பில்லியன் ரூபாய்களை இலங்கை மின்சார சபை இலாபமாக பெற்றுள்ளது. ஏனைய முதலீடுகளையும் சேர்த்து 75.7 பில்லியன் ரூபாய்கள் சபை இலாபமாக பெற்றுள்ளது. இதில் கடந்த ஒக்டோபர் முதல் 18வீத கட்டண அதிகரிப்பினால் 21...

மோட்டார் போக்குவரத்து தொடர்பில் வெளியிட்ட தகவல்!

எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திலும் சேவைகளைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அதற்காக  தொலைபேசி இலக்கமும் இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக  கொழும்பில் இன்று (29) ...

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

கடனை செலுத்தாத காரணத்தால் கடனாளிகளின் சொத்துக்களை வங்கிகளால் பறிமுதல் செய்வதை டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த முடிவிற்கமைய, கடன் வசூலிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தில் திருத்தம் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக நிலவும் பொருளாதார நிலைமையின் அடிப்படையில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடன் செலுத்துவதில்...

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனையில் திடீர் வீழ்ச்சி..!

பேக்கரி பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் அவற்றின் விற்பனையில் பாரிய சரிவு ஏற்ப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி பாண் விற்பனை 25% ஆகவும் கேக் உள்ளிட்ட பிற பேக்கரி பொருட்கள் விற்பனை 50% ஆகவும் குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் சிங்கள...

மதுபானங்களின் விலை குறைப்பு..!

நாடாளுமன்றத்தில் நேற்று(21)  நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பான சபை ஒத்துழைப்பு விவாதம் நடைபெற்றது. அதில்  இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் எனவும் ஒரு போத்தல் சாராய விலையை 1500 ரூபாவாக குறைக்க முடியும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  பொருளாதார...

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை..!

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தடம்புரண்டால் பெரும் பொருளாதார ஆபத்து ஏற்படலாம் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. உலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளிற்கு மத்தியில் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருகின்றது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் வளர்ச்சி பாதிக்கப்பட்டமை, நம்பிக்கையின்மை முதலீட்டாளர்களின் எதிர்மறை உணர்வுகள்...

200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு..!

சுகாதார அமைச்சில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் நாட்டில் சுமார் 200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உருவாகியுள்ளதாக  மருத்துவ விநியோகப் பிரிவு  தெரிவித்துள்ளது. மிகவும் அத்தியாவசியமான 40 வகையான மருந்துப் பொருட்களும் ஏனைய 160 வகையான மருந்து வகைகளுக்கும் இவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்டதாகவும் தற்பொழுது அந்த...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் திருத்தம்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின்  மொத்த மற்றும் சில்லறை விலைகள்  திருத்தப்பட்டுள்ளன. வர்த்தகர்களிடமிருந்து பொருட்களை அதிக இலாபத்துடன் வாங்க நுகர்வோருக்கு வழிகாட்டும் வகையில் ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 870 ரூபாவுக்கும், ஒரு கிலோ வெள்ளை சீனி 265 ரூபாவுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நெத்தலி 900 ரூபாவுக்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 320...
- Advertisement -

Latest News

வேலைவாய்ப்பு மோசடி; ஒரு வருடத்துக்குள் பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்துமாறு ரெயின்போ மேன்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம்...