Thursday, July 9, 2026
No menu items!

News Line

ஹௌத்தியின்  கிளர்ச்சி – கப்பல் பாதை மாற்றம்!

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக செல்வதற்கு 100க்கும் மேற்பட்ட கொள்கலன் தாங்கிய  கப்பல்கள் சுயஸ்கால்வாயில் செல்லாது வேறு  புதிய பாதைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் கப்பல்போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதற்கான அறிகுறி இது என கார்டியன் தெரிவித்துள்ளது. 103 கப்பல்கள் ஏற்கனவே பாதையை மாற்றியுள்ளன என குஹ்னே நஜெல்...

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் பாதுகாப்பு

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சிவில் உடையிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்...

மட்டக்களப்பில் தொடரும் இலங்கை போக்குவரத்து சபையின் பணி பகீஸ்கரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து  இரண்டாவது நாளாக இன்றும்   இலங்கை போக்குவரத்து டிப்போக்களில் பணி பகீஸ்கரிப்பு  முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி இந்த  பணி பகிஸ்கரிப்பானது மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த பணி பகீஸ்கரிப்பு காரணமாக பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

250 மில்லியன்  வழங்கத் தயார்; உலக வங்கி கருத்து

இலங்கையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அதனை கருத்தில் கொண்டு இலங்கையின் பொருளாதார பின்னடைவு மற்றும் ஸ்திரத்தன்மை அபிவிருத்திக் கொள்கையின் இரண்டாம் கட்டமாக 250 மில்லியன் டொலர்களை வழங்க தயாரகவுள்ளதாக உலக வங்கியானது கருத்து தெரிவித்துள்ளது.  வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக பெயரிடப்பட்டுள்ள “RESET DPO”, வேலைத்திட்டத்திற்காக 2023...

வாட்ஸ்அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம்

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக நாடு முழுவதிலும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் சுற்றிவளைப்புக்களில் பல போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுவருகின்றனர். இவ்வாறு யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டவர்களில் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் நீதிமன்ற அனுமதி பெற்று தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். இந்த விசாரணைகளில்...

ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கையர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.   இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.   இதன் முதல் கட்டமாக புதிய அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து சகலருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, டிஜிட்டல் அடையாள...

நெல்லியடி வியாபாரி கைது..!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார். குறித்த பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில்  போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவரே நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். பாடசாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்த ஹட்டன் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...

டொனால்ட் ட்ரம்பிற்கு தடை..! – நீதிமன்ற உத்தரவு

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்பு இருப்பதன் காரணமாகவே இந்த தடையை விதித்து கொலராடோ (Colorado) உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பானது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார். இது போன்ற தடை விதிப்புக்காக...

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை – சட்ட விரோத பொருட்கள் மீட்பு

தீர்வை வரி செலுத்தப்படாத ஒரு தொகைப்  பொருட்களுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி, புத்தளம், கொலன்னாவை மற்றும் வீரகெட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். மறைத்து வைத்து வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. விமான நிலையத்தில்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்திட்டம் முன்னெடுப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Global Max Networks (Pvt) Ltd நிறுவனத்தால் பல்வேறு உதவிப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தின்  கண்டாவளை, பெரியகுளம், முரசுமோட்டை பகுதிகளில் உள்ள நலன்புரிநிலையங்களுக்கு இந்த  உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த உதவித்திட்டத்தை நேற்று (19) Global Max Networks (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் நேரடியாக சென்று நிலையங்களுக்கு பொறுப்பானவர்களிடம் பொருட்களை கையளித்தார். கிளி/கண்டாவளை மகாவித்தியாலய...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...