Thursday, July 9, 2026
No menu items!

News Line

IPL ஏலத்தில் தெரிவான இலங்கை வீரர்கள்

2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்றைய தினம் டுபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இலங்கை அணியின் சார்பில் 8 வீரர்கள் பெயரிடப்பட்டிருந்தனர். இவர்களில் 3 வீரர்கள் மாத்திரமே அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்படி, நுவன் துஸாரவை 4 கோடியே 80 இலட்சம் இந்திய ரூபாய்க்கும், டில்ஸான் மதுசங்கவை 4 கோடியே 60 இலட்சம் இந்திய...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் . மேல், சப்ரகமுவ,...

யாழில். தறையிறங்காமல் திரும்பிய விமானம்..!

சென்னையில் இருந்து இன்றைய தினம் (19) செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாத நிலையில் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. நாடு முழுவதும் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளம் மற்றும் மண்சரிஆவினாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்திலும் தொடர்ந்தும் கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக சென்னையில் இருந்து...

ஜனவரியில் வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி..!

வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டமானது  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இது தொடர்பாக தெரிவித்தார். வடக்கு மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு பாலியாற்று நீர்...

குருநகர் பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம் 

சர்வதேச கடற்தொழிலாளர்கள் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம்(19) செவ்வாய்க்கிழமை கடற்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில்  யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.   மருத்துவ முகாமின் ஆரம்ப நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்தொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசந்த டி சில்வா மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதேவேளை கடற்தொழில் அமைச்சின் நடமாடும் சேவையும் குருநகர் பகுதியில் இன்றைய தினம்...

யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் திருட்டு

யாழ்ப்பாணத்தில் பொறுத்தப்பட்டிருந்த தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரங்களில் ஒன்று நேற்று (18) காணாமல் போயுள்ளது. எயிட்ஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில், நாடாளாவிய ரீதியில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்ட சில பொது இடங்களில் பொருத்தப்பட்டது. அவ்வாறு யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்திலும் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு இருந்தது. இந்த இயந்திரமே இவ்வாறு காணாமல் போயுள்ளது. இது தொடர்பில்...

போதைப்பொருளுடன் சென்றவர்களை பிடித்துக்கொடுத்த நாய் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், நேற்றைய தினம் (18) திங்கட்கிழமை பொலிஸார் மோப்ப நாய் சகிதம் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளை , அவ்வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மறித்து சோதனையிட்ட போது ,அவர்களிடம் போதைப்பொருள் இருப்பதனை மோப்ப நாய் அடையாளம் காட்டி கொடுத்தமையால் இருவரையும்...

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு ஜனவரியில்

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு ஏற்கனவே திட்டமிட்டபடி இடம்பெறும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் எதிர்வரும் 2024 ஜனவரி 21 ஆம் திகதி பொதுச் சபை கூடவுள்ளது. இதன் போது புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை தெரிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 26 ஆம் திகதி மத்திய செயற்குழு கூடவுள்ளது...

அதிகரித்த அடையாள அட்டைக் கட்டணம்

புதிய தேசிய அடையாள அட்டைக்கான புகைப்பட கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆள்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் 150ரூபாவாக அறவிடப்பட்ட நிலையில், தற்போது அடையாள அட்டை அல்லது நகல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு பதிவு செய்த புகைப்படக் கலைஞரால் விதிக்கப்படும் அதிகபட்ச கட்டணம் 400ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த விலை...

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மக்கள்

மன்னார் மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் 4 தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (18) பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  நேரில் சென்று பார்வையிட்டு உள்ளதோடு அந்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...