Friday, July 10, 2026
No menu items!

News Line

இன்று முதல் நடைமுறைக்கு வரும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்

நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் இன்று(01) முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உறுதிப்படுத்தியுள்ளார். ஜனவரி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட  திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தில் சபாநாயகர் இன்று கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில் குறித்த சட்டத்திற்கு...

இளம் பெண்களுடன் சுற்றுலா சென்ற பிக்கு!

சாதாரண உடையில் இளம் பெண்கள் மூவருடன் சுற்றுலா சென்றிருந்த பிக்கு ஒருவரை அவர் தங்கியிருந்த விகாரையில் இருந்து பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர். களுத்துறை மாவட்டத்தின் தர்கா டவுண் அருகே உள்ள வெலிப்பன்னை பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றிலே இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. மேலும் குறித்த பிக்கு சாதாரண ஆடையில் திஸ்ஸமஹாராம பிரதேசத்துக்கு மூன்று யுவதிகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். இதன்போது  அவரை...

மேற்கிந்திய தீவிடம் தோற்ற இலங்கை.

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் ஆரம்பமான சுப்பர் சிக்ஸ் சுற்றின் 3 போட்டிகள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் இந்தியா அணி 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில்...

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 4 பேர் பலி..!

பாகிஸ்தானில் இம்ரான் கானின் கட்சி ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் குண்டுவெடித்து பலர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில், நேற்று(30) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில்...

நாளை நடைபெறவுள்ள விவாசய விஞ்ஞான பாடத்தின் பரீட்சைகள்.

2023 ஆம் ஆண்டுக்கான  கல்விப் பொது தராதர உயர்தரப்  பரீட்சைகள் இம்மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகி இன்றுடன்(31)  நிறைவடைகின்றது. இந் நிலையில் கடந்த 08 ஆம் திகதி நடைபெறவிருந்த விவாசய விஞ்ஞானப்பாடத்தின் பகுதி 1 வினாத்தாளும் 10 ஆம் திகதி நடைபெறவிருந்த விவாசாய விஞ்ஞான பாடத்தின் பகுதி 2 வினாத்தாளும் சட்டவிரோதமாக வெளியானதன் காரணமாக ...

தேசிய கொடியை அவமதிப்பவர்களுக்கு எதிராக விடுத்துள்ள எச்சரிக்கை..!

தேசிய கொடியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என  பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் எச்சரிக்கை  விடுத்துள்ளார். மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் வீதி முழுமையாக மூடப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி பகல் 2 மணி முதல் 4 ஆம் திகதி பகல் 12...

காசாவுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் இலங்கை தேயிலை.

பலஸ்தீனத்தின் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவியாக ஒரு தொகைத் தேயிலையை அன்பளிப்பாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. காசாக்கு அனுப்பி வைக்கப்படும் தேயிலை, பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய, வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோர் தலைமையில் பலஸ்தீனத்தின் இலங்கைக்கான தூதுவர் சுஹைர் ஹம்தல்லாஹ் சைட்டிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள சவூதி அரேபியா, எகிப்து மற்றும்...

TIN இலக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்..!

நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம்  வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெறாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை இடைநிறுத்தியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும்,ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் எனவும், உரிய வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசாங்கம்...

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லக்கு சி.ஐ.டி விசாரணை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இன்று(31)  குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. இவர் சுகாதார அமைச்சராக செயற்பட்ட காலத்தில் இந்தியாவில் இருந்து தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யத விடயத்துடன் அவருக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இது  தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தியக்...

வெற்றி பெற்றது தஜிகிஸ்தான் அணி.

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் (28)  2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் இரண்டாவது போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இரச்சியம் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை அடைந்தாலும் பெனால்டி சுற்றில் தஜிகிஸ்தான் அணி 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதில் தஜிகிஸ்தான்...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...