Thursday, May 28, 2026
No menu items!

News

புத்தளத்தில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்பு.

புத்தளத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் நேற்று அவரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அங்கம்மன - வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சானக திஸாநாயக்க என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் தனது வீட்டின் மேல் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பாடசாலை முடித்து...

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்பாடு

காசா மீதான தாக்குதல்களை சில நாட்களுக்கு நிறுத்த உடன்பட்டு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கு பதிலாக ஹமாஸ் இயக்கத்தால் கடத்தப்பட்ட 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான யுத்தம்...

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று நிறைவேற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைப்பெற்றது. இதில் 45 மேலதிக வாக்குகளினால் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 13 ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 14...

தவறவிடபட்ட உலக கிண்ண வாய்ப்பு

2024 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் நிர்வாக நிச்சயமற்ற தன்மை காரணமாக இலங்கை இந்த வாய்ப்பை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய தொடரை நடாத்தும் வாய்ப்பை இலங்கையிடம் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது. நேற்று இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெற்ற...

இலங்கை கிரிக்கெட் மீதான முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்படும் சாத்தியம்

இன்று இந்தியாவின் அஹமதாபாத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டம் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டுமானால், அதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதிநிதிகள் பங்குபற்றும் இக்கூட்டத்தில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக...

சபையமர்வுகள் மீள ஆரம்பிக்கப்பட்டன

நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக சபாநாயகரால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட சபையமர்வுகள் மீள ஆரம்பிக்கப்பட்டன. நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் சபையமர்வுகள் 5 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன. வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதி நாளான இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே...
- Advertisement -

Latest News

மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கு தெற்கில் இன்னல்; சர்வதேச மனித உரிமை அமைப்பு

நாட்டில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ் தொழிலாளர்கள், கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்...