Wednesday, June 10, 2026
No menu items!

புதிய செய்திகள்

விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட 2,166 சந்தேகநபர்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 226 பேர் புனர்வாழ்வு மையத்திற்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர். 1கிலோ 370 கிராம் ஹெரோயின், 556...

சீனாவை உலுக்கிய பூகம்பம்

சீனாவில் நேற்று இரவு 6.2-ரிக்ட்டர் அளவில் பூகம்பம் பதிவாகியுள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் கன்சு மாகாணத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 100 இற்க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 200 இற்க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். வீடுகள் முற்றாக தரைமட்டமாகியுள்ளதால்  மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளிற்கு ஒடி அங்கே தஞ்சமடைந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சில கிராமங்களிற்கான மின்விநியோகமும் நீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

75 mmக்கு மேல் இன்றும் சில இடங்களில் மழை 

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். தீவின் பிற பகுதிகளில் மதியம் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்...

வெள்ளத்தில் மூழ்கும் முல்லைத்தீவு

நாடு முழுவதும் பெய்துவரும் தொடர் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அதிகளவான பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 1126 குடும்பங்களைச் சேர்ந்த 3463 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக முத்து ஐயன்கட்டுக்குளத்தின் 4 வான் கதவுகள் 2 அடி 9 அங்குலத்திற்கு...

யாழில் அச்சுவெலியில் அதிக மழை

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் பெய்த மழையில் அச்சுவேலி பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. இதற்கமைய, அச்சுவேலியில் 45.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், யாழ். நகர் பகுதியில் 35.8 மில்லி மீற்றர், வடமராட்சி அம்பனில் 34.4 மில்லி மீற்றர், தெல்லிப்பழையில் 33.3 மில்லி...

நிதி உதவியை தடை செய்த  ஹங்கேரி

உக்ரைனுக்கு வழங்குவதாக உறுதி அளித்திருந்த 50 பில்லியன் யூரோ தொகை தொடர்பில் 26 நாடுகள் ஒப்புக்கொண்ட பின்னர் ஹங்கேரி பிரதமரால் அதை முறியடிக்க முடியாது என்று நேற்று முன்தினம்(16) உதவிப் பேச்சுவார்த்தையில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த உதவிப் பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை...

வாகனம் வைத்திருப்போருக்கு  கடுமையான நடவடிக்கை

வருமான அனுமதிப்பத்திரத்தை கொண்டிராத வாகனங்கள் தொடர்பான, தகவல்களை  திரட்டவும்,  பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத சுமார் 23 இலட்சம் வாகனங்களை தடை செய்யவும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவிதுள்ளார். 05 வருடங்களுக்கு அதிக காலம் வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளாத வாகனங்கள் தொடர்பில் அனைத்து மாகாண சபைகளிடமிருந்தும் தகவல்களை கோரியுள்ளதாக...

பாகிஸ்தானை வீழ்த்திய அவுஸ்திரேலியா

கடந்த வியாழக்கிழமை ஒப்டஸ் மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. நேற்று தினம் நான்காம் நாள் ஆட்டத்தின் போது அவுஸ்திரேலிய அணி 360 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று அவுஸ்திரேலியா முதலில்...

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்

யாழ்ப்பாணம்-நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா  இன்றைய தினம் (18) திங்கட்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை  காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், 28ஆம் திகதி  வியாழக்கிழமை  தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.

மோட்டார் சைக்கிளுடன் உழவு இயந்திரம் மோதி விபத்து-முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு புதன்வயல் சந்தியில் நேற்று முன்தினம் (16) மோட்டார் சைக்கிளுடன் உழவு இயந்திரம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குமுழமுனையில் இருந்து தண்ணீரூற்று நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மாஞ்சோலையிலிருந்து குமுழமுனை வீதிக்கு நுழைந்த உழவு இயந்திரமே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர்களில் ஒருவர் படு காயங்களுக்குள்ளானதோடு அவர் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக கொண்டு...
- Advertisement -

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...