Friday, July 10, 2026
No menu items!

Updates

மாவனல்லையில் பாரிய தீ விபத்து..!

மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றிரவு (29) ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது சுமார் 30 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகி, பலத்த சேதமடைந்துள்ளன. மாவனல்லை பொஸார், மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...

புதிய இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்தின் காரணமாகவே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், லொஹான் ரத்வத்த சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய போது பல்வேறு...

நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி.

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைபெற்றிருந்தன. இதில் முதலாவது போட்டியில் சிம்பாப்வே அணி 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தியிருந்தது. இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தியிருந்தது. மற்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில்...

ஏடன் வளைகுடாவில் பற்றி எரிந்த கப்பல்

ஹவுதி போராளிகள்  செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  நேற்று(27) ஏடன் வளைகுடா பகுதியில் பிரித்தானியாவை சேர்ந்த எண்ணெய்க் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டாவை தாக்கியுள்ளதோடு எண்ணெய் கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து எண்ணெய் கப்பலில் இருந்தவர்கள், இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் கப்பலை தொடர்புக்கொண்டு உதவிக்கோரியுள்ளனர். இதனையடுத்து...

மீண்டும் ஆரம்பமாகவுள்ள இலங்கை – இந்திய கப்பல் சேவை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான திட்டமிடப்பட்ட பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதன் மூலம் இரு நாடுகளுக்கிடையில்   பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார் உறவுகள் புத்துயிர் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரை இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை  பெப்ரவரி 15 முதல் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து...

சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்.

கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல் மற்றும் செராமிக் சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரையான காலி வீதிகள் போக்குவரத்துக்காக மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். ஜனவரி 29 முதல் பிப்ரவரி 02 வரை காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையிலும், முற்பகல் 11.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும்...

19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைபெற்றிருந்தன. இதில் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அமெரிக்கா அணியை வீழ்த்தியிருந்தது. இரண்டாவது போட்டியில் நேபாள அணி ஒரு விக்கட்டு வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியிருந்தது. மற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய...

இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்காவினால் பதிவு செய்யப்பட்ட இனப்படுகொலை வழக்கிற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கானது, இன்று(26) சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன்  காசா மீதான தாக்குதலில் இனப்படுகொலை செய்ததாக தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரில் இனப் பேரழிவு தொடர்பான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று...

பவதாரணியின் இறுதிக்கிரியை வெளியான தகவல்

சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். மேலும் பவதாரணியின் உடல் இன்று (27) தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பொதுமக்களின் அஞ்சலியை தொடர்ந்து இன்று மாலை பவதாரணியின் உடல் இளையராஜாவின் தாய் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதனை தொடர்ந்து,...

உயிரிழந்த சனத் நிஷாந்தவின் மரணம் திட்டமிட்ட விபத்தா…!

கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி விபத்து இடம்பெற்ற தினத்தன்று மதியம் தனது வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஒரு பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. “நாளைய தினத்திற்குள், என பெயருக்கு கீழ் ஒரு அழகான புகைப்படமும் படத்திற்கு மேல் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டிருந்தால்...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...