பிரபல நடிகை தமிதா அபேரத்ன எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து சமகி ஜன பலவேகய (SJB) சார்பில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அபேரத்ன, SJB இன் தீவிர ஆதரவாளராகவும் குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகிறார்.
இந் நிலையில் செவ்வாய்க்கிழமை வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.
அபேரத்ன தனது வேட்புமனுவுடன், துன்பப்படும் பொதுமக்களுக்கு சேவை செய்வதாக நம்புகிறார், இதுவே தனது முடிவின் உந்து சக்தியாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுமக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், குறிப்பாக கலைஞர்களைப் பாதிக்கும் சவால்கள் குறித்து தனக்கு வலுவான புரிதல் இருப்பதாகவும் அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.








