Sunday, May 3, 2026
No menu items!

டக்ளஸ் தேவானந்தா

கிளிநொச்சி மாவட்டத்திற்கு பிரதமர் விஜயம்..!

கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்துக்குள் அமைந்துள்ள வியாபார நிலையத்தை திறந்து வைத்த ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் மூன்று இளம் வியாபார முதலீட்டாளர்களுக்கு வியாபாரத் சான்றிதழ்கள் வழங்கி வைத்தார். அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தின் விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் அவர்கள் பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும்...

பிரதமர் தினேஷ் குணவர்தன வட மாகாணத்திற்கு விஜயம்..!

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற தற்காலிக பணியாளர்களுக்கான நிரந்தர நியமனமங்களை பிரதமர் தினேஷ் குணவர்த்தன நேற்று யாழ்ப்பாணத்தில் வழங்கி வைத்தார். வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களிலே தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்த 175 பேருக்கான நியமனங்களை நேற்றைய தினம் பிரதமர் யாழ்ப்பாண பொது நூலகத்தில் வைத்து வழங்கி வைத்தார். இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன்...

சீன அரசாங்கத்தின் பொருத்து வீட்டுத்திட்டம்..!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத்திட்டத்தின்  வீடுகள் அமைப்பதற்காக எட்டு பாரஊர்திகளில் பொருத்து வீடுகள் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டன. குறித்த பொருத்து வீடுகளைக்கொண்ட பாரஊர்தியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பார்வையிட்டார். மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 64வீடுகள் இவ்வாறு  வழங்கப்படவுள்ளது. என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

புதுடெல்லிக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸிற்கு அழைப்பு..!

புதுடெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கரினால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் தடைப்பட்டிருக்கின்ற இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்தியக் கடற்றொழிலாளர்கள் விவகாரத்தினை தீர்ப்பதற்கும்  இந்திய வெளியுறவு அமைச்சர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில்,  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ்...

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றைய தினம் பிற்பகல் பூநகரி பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் குடமுருட்டி குளத்தின் கீழ் நெற்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் பள்ளிக்குடா மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கடலரிப்பு மற்றும் இறங்கு துறை இன்மை போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து ஊடகங்களுக்கு அமைச்சர்...

ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் !

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி அக்ரோ ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு நேரில் சென்று அதன் உற்பத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். வடமாகாணத்தில் முதன்முறையாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் 'லங்காஜம்போ' நிலக்கடலை உற்பத்தி முறையானது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஜம்போ நிலக்கடலை உற்பத்தி ஏற்றுமதி பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி கூட்டம் இன்று நடைபெற்றது!

கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இதில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்கள் வரவேற்புரையை  நிகழ்த்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில்  பொது அமைப்புக்கள் மற்றும் பொது...

யாழ் நகர் நவீன பொது மலசலகூட தொகுதியை துரிதமாக நிர்மாணிக்க துறைசார் தரப்பினதுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!..

யாழ் நகர்ப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பொது மலசலகூட தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான திட்டவரைபுகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதிகளுக்கு தினமும் வரும் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் அவசர அவசிய தேவைகருதி நகரப்பகுதியில் நவீன வசதிகளை கொண்ட பொது மலசலகூடம் ஒன்றை...

அலங்கார மீன்கள் மூலம் அதிக வருமானம் இலங்கைக்கு!

2019ம் ஆண்டு  முதல் இந்த வருடம் (2024) ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில், அலங்கார மீன்கள் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு 263.2 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடற்றொழில் அமைச்சில் செவ்வாய்க்கிழமை (11)  இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த  அலங்கார மீன்கள் ஏற்றுமதியை அதிகரிக்கவும், அது தொடர்பிலான...

அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

காலநிலை சீர்கேடு மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அனலைதீவு கடற்பரப்பில் இருந்து கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் கடற் கடற்றொழிலுக்கு சென்ற குறித்த இருவரும் கரை...
- Advertisement -spot_img

Latest News

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த...
- Advertisement -spot_img