Saturday, April 25, 2026
No menu items!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமானநிலையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!

சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான "குஷ்" ரக போதைப்பொருளுடன் இலங்கைக்கு வந்த மூன்று சந்தேகநபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து நாட்டை வந்தடைந்த இவர்களிடம் இருந்து, சுமார் 4.22 கிலோகிராம் "குஷ்" போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாளிகாவத்தை பகுதியில் ரூ.10 மில்லியனுக்கும் அதிகமான கடத்தல் பொருட்கள் பறிமுதல் – நால்வர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக சுங்கச் செலுத்தாமல் நாட்டிற்குள் கடத்தப்பட்ட ரூ.10 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள மொபைல் போன்கள், வாசனை திரவியங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள் மாளிகாவத்தையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் நால்வர் மாளிகாவத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாளிகாவத்தை பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது...

விமான நிலையத்தின் வருகை முனையத்தில் புதிய சாரதி அனுமதிப் பத்திர கிளை அலுவலகம் திறப்பு!!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 05 நிமிடங்களுக்குள் இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் மோட்டார் போக்குவரத்துத் துறையின் புதிய கிளை அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்துள்ளார். ஒரு வருடத்திற்கு மேல்...

நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தார் இந்திய பிரதமர்..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல்...

விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து மாபியாக்கள்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு பிரிவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து சேவை மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த பேருந்து சேவையானது வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு தரையிறங்கும் போது இலங்கையிலிருந்து பெறும் முதல் சேவையாகும். பொதுவாக, எதையாவது பற்றிய முதல் எண்ணம் அதைப் பற்றிய கடைசி எண்ணமாகும்,...

பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக் காதலன்…!

ஓமானில் வீட்டு வேலை செய்துவிட்டு நாடு திரும்பிய பெண்ணை ஏமாற்றி சுமார் 12 லட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொண்ட நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். பேஸ்புக் ஊடாக குறித்த பெண்ணை அடையாளம் கண்டுகொண்ட சந்தேக நபர், அவருடன் நெருங்கிய உறவை வளர்த்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம மல்வனேகம பிரதேசத்தில்...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img