Wednesday, May 13, 2026
No menu items!

குளவிக் கொட்டு

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 39 பேர்!

மஸ்கெலியா ப்ரவுன்ஸ்விக் தோட்டப் பகுதியில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 39 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்களில் 35 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். அதேநேரம், 4 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குளவிக்கொட்டுக்கு இலக்காகி பலர் வைத்தியசாலையில் அனுமதி..!

கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லக்கதிர்காமம் பாலத்துக்கு அருகில் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். 4 சிறுவர்களும், 6 சிறுமிகளும் மற்றும் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் என மொத்தம் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் செல்லக்கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.  

குளவியின் தாக்குதலால் மூடப்பட்ட பாடசாலை…

கிளிநொச்சி - தருமபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக் கற்றல் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் இன்று(13.06) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள நாவல் மரம் ஒன்றில் இருந்த குளவிக் கூடு  ஒன்று, அதிக காற்று வீசி வரும் நிலையில் கலைந்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது 18...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img