Friday, August 14, 2026
No menu items!

கொட்டாவை

துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது!!

மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள், கிடைத்த தகவலின் அடிப்படையில் கொட்டாவை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்தச் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார்...

கொட்டாவையில்  விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு!

கொட்டாவை - மாலபல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளுக்கு புதிய பஸ் சேவை!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் (BIA) கொட்டாவையில் உள்ள மகும்புர மல்டிமோடல் மையத்திற்கும் இடையில் புதிய CTB சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தை அண்டிய பிரதான வீதியில் நிறுத்தப்படும் பேருந்தில் பயணிகள் ஏறலாம். ஏர்போர்ட் அன்ட் ஏவியேஷன் சர்வீசஸ் (இலங்கை) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) படி, விமான நிலையத்திற்கு வந்து செல்வதற்கு போக்குவரத்து வசதிகளை தேடும்...

கொட்டாவை பிரதேசத்தில் திடீரென தீ பற்றி எரிந்த வேன்…!

கொட்டாவை - மஹரகம வீதியில் கொட்டாவை பிரதேசத்தில் வேன் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து சனிக்கிழமை (26.10.2024) இடம்பெற்றுள்ளது. வேனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவ்விபத்தின்போது வேனில் மூன்று பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என...

காணி ஒன்றிலிருந்து இனம்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு!

கொட்டாவை அதிவேக வீதிக்கருகில் மிஹிந்து மாவத்தை பிரதேசத்திலுள்ள காணி ஒன்றிலிருந்து இன்று (01.10.2024) பிற்பகல் ஆணொருவரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 50 வயதுடையவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் தெரியவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோமாகம மிஹிந்து மாவத்தை பிரதேசத்தில் சுமார் ஒரு வார காலமாக நிலவிய துர்நாற்றம் தொடர்பில்...

இரண்டு அதிகாரிகள் அதிரடி கைது…!

கொட்டாவை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இரு அதிகாரிகள் உட்பட மூவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 இலட்சம் ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

குழந்தைகளை துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

குழந்தைகளை புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது. அதன் சட்ட...
- Advertisement -spot_img