Monday, June 8, 2026
No menu items!

சுகாதார திணைக்களம்

மனித பாவனைக்கு ஒவ்வாத மெற்றிக் தொன் உணவு பொருட்கள்..

உணவு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வெயாங்கொடை களஞ்சியசாலைகளில் உள்ள 1,623 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் மனித பாவனைக்கு ஒவ்வாதவை எனச் சுகாதார திணைக்களம் சான்றளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு ஆணையாளர் உபுல் சாந்த டி அல்விஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த உணவுப் பொருட்கள் உலக உணவு வேலைத்திட்டத்தினால் வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி அந்த பொருட்கள் தொடர்பில்...

சுகாதார சேவையினரின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு..!

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தம்மால் முடிந்தளவு சிறப்பான சேவையை மக்களுக்கு முன்னெடுத்து வருகின்றமைக்கு சுகாதார திணைக்களத்தினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், சுகாதார சேவையினரின் நியாயமான கோரிக்கைகளுக்கு முடியுமானவரையில் விரைவாக தீர்வுகளைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழான மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், பொதுமருத்துவமனைப்...

வவுனியாவில் அதிகளவான மாரடைப்பு மரணங்கள் பதிவு..!

வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம் அடைந்துள்ளதாக வவுனியா சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. மாரடைப்பால் இறந்தவர்கள் தொடர்பில் வினவியபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 20 வயது தொடக்கம் 40 வயது வரையானவர்களில் ஒருவரும் 40 தொடக்கம் 60  வயது வரையானவர்களில் 13 பேரும்...

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வண்டு அரிசிகள்..!

மூன்று கொள்கலன்களில் தனியார் இறக்குமதியாளர்களால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 75,000 கிலோகிராம் அரிசி மனித பாவனைக்கு தகுதியற்றது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களத்தின் உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள்  தெரிவித்துள்ளனர். மூன்று கொள்கலன்களில் இரண்டில் இருந்த அரிசியில் வண்டுகள் காணப்பட்டதாகவும், மற்றைய கொள்கலனில் இருந்த அரிசியின் காலாவதித் திகதி உள்ளிட்ட தகவல்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த அரிசியை மனித...

சுகாதார திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி!

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (AFS) மற்றும் போர்சின் இனப்பெருக்க மற்றும் சுவாச நோய்க்குறி (PRRS) கண்டறியப்பட்டதன் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் அபாயகரமான பகுதிகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் வெளியிட்டுள்ளது. வர்த்தமானியின் பிரகாரம், ஒவ்வொரு பிரதேச செயலகமும் பாதிக்கப்பட்ட பிரதேசமாக அல்லது தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும்...

நாட்டில் முதன் முறையாக ஆபிரிக்கப் பன்றிக்காய்ச்சல்!

நாட்டில் முதன் முறையாகப் பன்றிகளிடையே பதிவான ஆபிரிக்கப் பன்றிக்காய்ச்சல் காரணமாகப் பன்றி இறைச்சியைக் கொண்டு செல்வதற்கு முன்னர் பிரதேச பொதுச் சுகாதார அதிகாரியின் அனுமதி கட்டாயம் எனக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் பன்றிகளிடையே பதிவான ஒரு வகையான நோய் நிலைமை ஆபிரிக்கப் பன்றிக்காய்ச்சல் என உறுதி...

பன்றிகளை ஏற்றிச் செல்லும் போது கால்நடை சுகாதார சான்றிதழ் கட்டாயம்!

பன்றிகளை ஏற்றிச் செல்லும் போது கால்நடை சுகாதார சான்றிதழை கட்டாயமாக்க கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. தற்போது இலங்கையில் பன்றிகள் மத்தியில் பரவும் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பண்ணை உரிமையாளர்கள் கால்நடை சுகாதார சான்றிதழை அந்தந்த கால்நடை வைத்தியர்களிடம் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும். சுகாதார சான்றிதழ் இல்லாமல் பன்றிகளை கொண்டு...

கால்வாய்களில் வீசப்படும் பன்றிகளின் சடலங்கள்…!

ஜா - எல தண்டுகம பிரதேசத்தில் உள்ள கால்வாய்களில் உயிரிழந்த பன்றிகளின் சடலங்களை வீசுவதால் பிரதேசவாசிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். கால்நடைப் பண்ணைகளில் பரவி வரும் வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்த பன்றிகளின் சடலங்களே இவ்வாறு கால்வாய்களில் வீசப்படுகின்றது. மேல், வடமேற்கு மற்றும் வட மாகாணங்களில் உள்ள பல்வேறு கால்நடைப் பண்ணைகளில் உள்ள பன்றிகள் இந்த வைரஸ்...

பண்ணையினால் பரவும் நோய்..!

அம்பலாந்தோட்டை ரிதியகம பண்ணையில் உள்ள விலங்குகளிடமிருந்து பரவும் Brucellosis நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. மாடு, ஆடு, பன்றி போன்ற விலங்குகளால் மனிதர்களுக்கு இந்நோய் பரவுகிறது, மேலும் விலங்குகளுடன் நெருக்கமாக வேலை செய்பவர்களுக்கு இந்நோய் தாக்கும் அபாயம் அதிகம். இந்நோயினால் பாதிக்கப்பட்ட பத்து பேர் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காய்ச்சல், தலைவலி,...

அச்சுறுத்தலுக்குள்ளாகிய நோயாளி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பிலான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரான தம்பி ஐயா கிருஷ்ணானந்த் யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img