ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அரச நிதியிலிருந்து மேலும் ரூ. 100 பில்லியன் கோருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருகிற சூழலில் இந்த நிதி கோரப்பட்டுள்ளது.

மேலும், சுமார் ஒன்றரை ஆண்டுகளாக தலைமை நிர்வாக அதிகாரி இல்லாமலும், தற்போது தலைவர் இல்லாமலும் இயங்கி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது குறித்து பொதுமக்களுக்கு பதில்கள் தேவை என்றும், நிதி, நிர்வாகம் மற்றும் தலைமை தொடர்பான பிரச்சினைகளுக்கு அதிக பொறுப்புக்கூறல் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here