Friday, May 1, 2026
No menu items!

செவனகல

மீன்பிடிக்க சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

செவனகல பகுதியில் ஹபுருகலை போதிராஜா குளத்தில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்தார். செவனகல மஹகம பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபரே சம்பவத்தில் மரணித்தார். குறித்த நபர் மற்றொரு நபருடன் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு குழியில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து செவனகல பொலிஸார்...

நெலும்வெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

வீட்டில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலும்வெவ பிரதேசத்தில் நேற்று (06) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர். நெலும்வெவ, சமகிபுர பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டில் சுகயீனமுற்றிருந்த தாய்க்கு மதிய உணவு வழங்குவதற்காக வீட்டுக்குச் சென்ற தந்தை வீட்டுக்குள் நாய்கள்...

சுற்றுலா மையமாக மாற்றப்படும் சீனித் தொழிற்சாலைகள்..!

செவனகல மற்றும் பெல்வத்தை சீனித் தொழிற்சாலைகளுக்குச் சொந்தமான சுமார் 15,000 ஹெக்டேயர் காணிகளை அரச-தனியார் கூட்டு (PPP) மாதிரியின் கீழ் சுற்றுலா மையங்களாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரண்டு சர்க்கரை ஆலை வளாகங்களும் ஒன்றாக 15,000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளன, மேலும் ஓடைகள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் கைவிடப்பட்ட பங்களாக்கள் ஆகியவை ஒரு காலத்தில் செயல்பாட்டில்...

200 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் கண்டுபிடிப்பு..!

செவனகல பகுதியிலுள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்று முந்தினம் (31) கண்டுபிடிக்கப்பட்ட 54 கிலோ ஹெரோயின் 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த போதைப்பொருள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆர்மி சூட்டிக்கு சொந்தமானது என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தம்மிக்க சமன் குமார என்ற நபர் கடந்த 30ஆம் திகதி பொரலஸ்கமுவ...

ஹெரோயின் போதைப்பொருளுடன் கணவன் மனைவி கைது!

செவனகல, கிரிவெவ பிரதேசத்தில் நேற்று (31) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட மொத்த ஹெரோயின் தொகை சுமார் 53.65 கிலோகிராம் ஆகும், இதன் பெறுமதி ரூ. 2 பில்லியன் ஆகும். STF அதிகாரிகள் குழுவொன்று சோதனை நடத்திய போது போதைப்பொருள் கடத்தல் பிளாஸ்டிக் கொள்கலன்களில் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு தொடர்பில் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டு...

100 கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு..!

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செவனகல பிரதேசத்தில் 40 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செவனகல பிரதேசத்தில்...

மொனராகலை பகுதியில் கோர விபத்து..!

மொனராகலை மாவட்டத்தின் செவனகல சந்தி, கினிகல்பலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (29) இரவு செவனகல சந்தியிலிருந்து கினிகல்பலஸ்ஸ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் செவனகல பிரதேசத்தை சேர்ந்த 35...

29 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகலய கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் 29 மாணவர்கள் உணவு விஷமாகியதன்  காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 26 மாணவர்களும் 03 மாணவிகளும் இரவில் சாப்பிட்ட பொறித்த மீன் வகையே இந்த பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சூரியவெவ வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img