Tuesday, April 28, 2026
No menu items!

திருவிழா

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா;  8 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி, இன்று (15) காலை 6:15 மணிக்கு, மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோணி பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்த திருப்பலியில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்ரமசிங்க, இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் அன்ரன் வைமன் குரூஸ்,...

யாழ்ப்பாணம் நாகர்கோவில் மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்!

யாழ்ப்பாணம் நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஒன்று 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. மேற்படி ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா கடந்த 8ஆம் திகதி தொடங்கியிருந்த நிலையில், இது ஏழாம் மாம்பழத் திருவிழா ஆகும், நேற்று (14) நடைபெற்றது. திருவிழா நிகழ்ச்சியின் போது இரவு முருகனும் விநாயகப் பெருமானும்...

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்..!

வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்திர திருவிழா எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் மிக சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தற்காலிக கப்பல் நிலையத்தினை அமைத்தல், குடிநீருக்கான நீர் அமைப்புகளை அமைத்தல், சுகாதார வசதிகள், தற்காலிக அறைகள் மற்றும் தற்காலிக பாதைகள்...

நல்லூர் கந்தசுவாமி கோயில் 21ஆம் திருவிழா!

நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 21ஆம் திருவிழாவான தங்கரத திருவிழா நேற்று (29) மாலை சிறப்பாக நடைபெற்றது. விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி தெய்வாணை சகிதம் உள்வீதியுலா வந்து , தொடர்ந்து தங்கரதத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருட்காட்சி அளித்தார். இதில் பல மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா!

மன்னார் மருதமடு திருவிழா   எதிர்வரும் 06 ஆம் திகதி மருத மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு,15 ஆம் திகதி திருவிழா திருப்பலி கூட்டுத்திரு பலியாக ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது. திருவிழாவுக்கான முன் ஆயத்த கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்துள்ளனர். இக் கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்க.கனகேஸ்வரன்  தலைமையிலும் மன்னார்...

திருவிழா தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்….

யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழாவினை எதிர்வரும் ஜீன் 07ஆம் திகதி தொடக்கம் ஜீன் 22ஆம் திகதி வரை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், திருவிழாக் காலங்களில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img