Sunday, April 19, 2026
No menu items!

நபர்

நாகொடை பகுதியில் பேனா வடிவ துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றல் – ஒருவர் கைது!

காலி, நாகொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவ துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்த 23 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகொடை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு நேற்று (06) மாலை இந்த கைது நடந்தது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ஒரு தோட்டாவை மட்டுமே சுடும் திறன் கொண்டது, அதேபோல் இரண்டு சுடப்படாத தோட்டாக்களும்...

இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (17) பிற்பகல் 2:00 மணியளவில், வலையை எறிந்து கொண்டிருந்தபோது, தவறி நீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில், சாந்தபுரத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பிச்சை துரைராசா என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலில் மோதி நபரொருவர் பலி!

கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையங்களுக்கு இடையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (19) அதிகாலை இடம்பெற்ற மேற்படி விபத்தில் பலத்த காயமடைந்த நபர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மரணமடைந்த நபருக்கு 65 வயது இருக்கலாம் எனவும், ஏனைய...

கடத்திச் செல்லப்பட்ட மாணவி கண்டுபிடிப்பு!

கம்பளை ,கெலிஓயா பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட மாணவியை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட இந்த மாணவி அம்பாறை பேருந்து நிலையத்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, ​​கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில்...

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் 50 வயதுடைய நபர் கைது!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் 50 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மாதம் ரூ. 100,000 தருவதாக சந்தேக நபர் கூறியுள்ளார். சந்தேக நபர் தொலைபேசி மூலம் பதில் OIC ஐ தொடர்பு கொண்டு இப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலை அனுமதிப்பதற்கு ஈடாக மாதத்திற்கு  ரூ.100,000 தருவதாக கூறியுள்ளார். இது தொடர்பில் இலஞ்ச...

வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்க அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் பட்டியல்!

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்க அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் பட்டியலை விவரிக்கும் ஊடக அறிக்கையை இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், வாக்குச்சாவடி ஊழியர்கள், தேர்தல் பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள், அவர்களது தேர்தல் மற்றும் வாக்குச் சாவடி முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட...

யானை தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழப்பு!

வவுனியா போகஸ்வெவ பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 53 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம்  இன்று திங்கட்கிழமை (26)  காலை  போகஸ்வெவ பகுதிக்குட்பட்ட சலனிகம கிராம வயற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை  போகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இகலமுல்லவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட புகையிரத வீதியின் நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (18.07) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண் ஒருவர் கொலை! பல நாட்களுக்கு பின்னர் சிக்கிய கொலையாளி..!

பியகம, மல்வான பிரதேசத்தில் பெண் ஒருவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய நபர் ஒருவர் கொஸ்கொட பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் சில நாட்களுக்கு முன்னர், பியகம- மல்வான பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். நவந்தகல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தங்கியிருந்த வாடகை வீடொன்றினுள்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img