Thursday, August 6, 2026
No menu items!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்

ஆயுர்வேத மருத்துவ பீடங்களில் நிலவும் குறைபாடுகள் தீர்க்க – சுகாதார அமைச்சரின் தலைமையில் விசேட கலந்துரையாடல்!!

நாட்டின் அரச ஆயுர்வேத மருத்துவ பீடங்களில் தற்போது நிலவும் குறைபாடுகளை ஆராய்ந்து அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்கும் நோக்கில், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்னவின் பங்கேற்புடன், சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் அண்மையில் விசேட கலந்துரையாடல் ஒன்று...

பல்கலைக்கழகக் கல்வியில் ஊழல் ஒழிப்பு தொடர்பில் புதிய முயற்சி: CIABOC – UGC புரிந்துணர்வு ஒப்பந்தம்!

உயர்கல்வித் துறையில் ஊழலை தடுப்பதற்காக, இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவும் (CIABOC) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் (UGC) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்: ஊழல் எதிர்ப்பு முயற்சியில் உயர் கல்வியை முக்கிய மையமாக்கல்-CIABOC கூறியது போல, இந்த MoU ஊழலுக்கு எதிரான தேசிய முயற்சியில் உயர்கல்வி துறையை...

வெளியான பல்கலைக்கழக அனுமதிக்கான Z புள்ளிகள்!

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான Z புள்ளிகளைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 42,172 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த வருடம் 90,670 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்திருந்ததாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, கலைப்பிரிவுக்கு 11,717...

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான Z புள்ளி இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 06 மணிக்கு பின்னர் குறித்த Z புள்ளி வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்: ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் !

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று அதிகாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நேற்று நடைபெறவிருந்த பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்கலைக்கழக நிர்வாகம், பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் திங்கட்கிழமை (ஜூலை 14) இரவு 8:00 மணிக்குள் தங்களது விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தியது. இதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் கிடைக்கப்பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக சேர்க்கை கையேடு வெளியிடு!

சமீபத்தில் வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான சேர்க்கை கையேடு இன்று வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் (UGC) தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு அடுத்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, நாடு முழுவதும் 43,300 மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு திட்டங்களில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, கம்பஹா விக்ரமாராச்சி சுதேச...

பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் தொடர்பில் விசேட அறிக்கை வெளியீடு!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவனின் திடீர் மரணம் பகிடிவதை காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுவார்கள் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரின் திடீர் மரணம் தொடர்பாக இன்று (1) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், வளாகங்கள் மற்றும் நிறுவகங்களில் பயிலும் இளமாணி மற்றும் பட்டமேற்க் கல்வி மாணவர்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள்...

பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்கள்..!

பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை இணைத்துக் கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் கலந்துரையாடிய பின்னர் இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அதன் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார். தற்போது வெற்றிடமாகவுள்ள விரிவுரையாளர்களில் 50 வீதமானவர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட மூவர் இராஜினாமா!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் UGC தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆணைக்குழுவில் தங்களுடைய பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தமது இராஜினாமா கடிதத்தை திங்கட்கிழமை (14) ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. UGC உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பை அடுத்து இந்த இராஜினாமாக்கள் நடந்ததாக கூறப்படுகிறது. இதன்படி, யுஜிசியின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர்...
- Advertisement -spot_img

Latest News

ஓகஸ்ட் மாதத்துக்கான லாஃப் கேஸ் விலையில் மாற்றம் இல்லை

லாஃப்  கேஸ் நிறுவனம் ஓகஸ்ட் மாதத்திற்கான உள்நாட்டு LPG சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. தற்போதுள்ள விலை அமைப்பில் எந்த மாற்றமும் இன்றி, லாஃப்ஸ்...
- Advertisement -spot_img