Friday, May 1, 2026
No menu items!

புலமைப்பரிசில் பரீட்சை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய தகவல்..!!

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நடைபெறவுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தலைமையில் இன்று (09) காலை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கருத்து வௌியிட்ட பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், பரீட்சை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. எனினும், அனைத்து மாணவர்களும்...

இந்த வருடத்திற்குரிய புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

தரம் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு..!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பெற்றவர்களை ஆறாம் வகுப்புக்கு அனுப்புவதற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண் மீள்திருத்தம் தொடர்பான அறிவிப்பு..!

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை இன்று (27/1/2025) முதல் பெப்ரவரி 6 வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். பெறுபேறுகளை மீள் பரிசீலனைக்காக இணையவழி முறைமையின் மூலம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பதிவாகிய அதிகூடிய புள்ளி!

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளுக்கமைய 16.05 சதவீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கும் அதிக புள்ளிகளை பெற்றுள்ளனர். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக 188 புள்ளி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   <!-- -->

வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பார்வையிட முடியும். செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

வெளியாகும் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்…!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். விடைத்தாள் மதிப்பீடு புதன்கிழமை (8/1/2025) 64 மையங்களில் தொடங்கியது என்று அவர் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர்...

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பணிகள் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன. குறித்த பரீட்சையின் பெறுபேறுகளை 40 நாட்களுக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.   <!-- -->

புலமைப்பரிசில் மனு தொடர்பான இறுதி முடிவு விரைவில்..!

புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று வினாக்கள் கசிந்ததையடுத்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தக்கோரி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் சமர்ப்பித்த அடிப்படை மனித உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று (18) உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனுக்கள் தொடர்பான முடிவு எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கப்படும் என உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது. யசந்த கோதாகொட,...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img