Wednesday, August 5, 2026
No menu items!

பொலிஸ் அதிகாரிகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மெகசின்கள்மற்றும் வயர்கள் கண்டெடுப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்களும்( துப்பாக்கிகளில் தோட்டாக்களை நிரப்பி வைக்கும் பெட்டகங்கள்)  சில வயர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, பல்கலைக்கழக நூலக கட்டிடத்தின் சீலிங்கின் மேல் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்று தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு பொலிஸ் அதிகாரிகள் வந்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர். மேலும், இந்தப் பொருட்கள் எந்தவித நோக்கத்திற்காக...

300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்..!!

இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஒரு அரசாங்கம் என்ற வகையில், எந்தவொரு நபருக்கும் எதிராக, அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார். குறைந்த எண்ணிக்கையிலான அரசு...

பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ நவீன அழகு கலை நிலையம் திறப்பு!

பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முன்னெடுப்பில், பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ எனும் நவீன அழகு கலை நிலையம் நேற்று (15) திறக்கப்பட்டது. இந்த சிகை அலங்கார நிலையம், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் நடைபெற்று, அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் அழகு சேவைகளை...

பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்து வடமராட்சி இந்து கல்லூரி முன்னெடுத்த விழிப்புணர்வு பவனி !

சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து கல்லூரியில் இன்று காலை 8:30 மணிக்கு "பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுறுத்துவோம்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பவனியும், வீதி நாடகமும் நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது விழிப்புணர்வு  பவனியானது பாடசாலை முன்றலில் ஆரம்பமாகி பின் பருத்தித்துறை ஓராம் கட்டை சந்தியிலிருந்து பிரதான வீதி ஊடாக பேருந்து நிலையம் வரை சென்று...

அமைதி காலத்தில் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (03) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்தது. அதன்படி, இன்று தொடங்கும் அமைதி காலத்தில் வேட்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எந்தவித பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார். 339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்தல், நாளை மறுநாள் காலை...

வர்த்தகரை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்..!

ஏறாவூரில்  வர்த்தகர் ஒருவரைத் தாக்கிய இரு பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏறாவூர் - மைலம்பாவெளி  பிராதன வீதியில் மதுபோதையில் சிவில் உடையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இரு பொலிஸ் அதிகாரிகளின்  மோட்டார் சைக்கிளை முந்திச் சென்ற வர்த்தகர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்கள். இந்த சம்பவம் கடந்த...

பொலிஸாரின் செயற்பாட்டை கண்காணிக்க புதிய திட்டம்..!

பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான புதிய திட்டமொன்றை, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு ஆரம்பித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிச் சூடு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பது பொலிஸ் அதிகாரிகள் பொறுப்பு என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்தக் கடமைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, பொலிஸ் அதிகாரிகளின் செயற்றிறனை மாதந்தோறும் பதில் பொலிஸ்...

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொலிஸார் கடமையில்..!

77ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான பிரதான விழா மற்றும் ஒத்திகைகளின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1,650 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ இடையூறு ஏற்படாத வகையில் ஒத்திகை மற்றும் நிகழ்வை எளிதாக்கும் வகையில் பொலிஸ் சிறப்பு போக்குவரத்து திட்டத்தையும் அறிவித்துள்ளது. சுதந்திர தின கொண்டாட்ட...

தேவாலயங்களில் அதிரடியாக குவிக்கப்படும் பாதுகாப்புப் படை..!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க  தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும்...

10 மாதங்களில் இலஞ்சம் வாங்கியமை தொடர்பில் 73 பேர் கைது..!

கடந்த 10 மாதங்களில் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் 73 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒரு தலைமை பொலிஸ் ஆய்வாளர், இரண்டு பொலிஸ் ஆய்வாளர்கள், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், எட்டு பொலிஸ் அதிகாரிகள்  மற்றும் ஒன்பது சார்ஜென்ட்கள் உட்பட 21 பொலிஸ்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்கள் முடக்கம்

தேவையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி செயல்படும் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கை முடக்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இலங்கை தொலைத்தொடர்புகள்...
- Advertisement -spot_img