Tuesday, June 9, 2026
No menu items!

போதைப்பொருட்கள்

1,208 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருட்கள் அழிப்பு…!

பல்வேறு சந்தர்ப்பங்களின் போது கைப்பற்றப்பட்ட 1,208 கிலோகிராம் போதைப்பொருட்கள் அவை தொடர்பான, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து அழிக்கப்பட்டுள்ளன. இதனை இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கை, புத்தளம் -வண்ணாத்தவில்லு, லாக்டோஸ் தோட்டத்தில் உள்ள அதிசக்தி வாய்ந்த போதைப்பொருள் எரியூட்டியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு, தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ்...

சீதுவையில் கைப்பற்றபட்ட 185 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்…!

சீதுவையில் உள்ள சரக்கு விமான சேவைகள் மூலமாக தயிரில் இருந்து எடுக்கப்பட்ட புரதங்களின் பவுடர் என கூறி  நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 185 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆறு பெரிய பிளாஸ்டிக் போத்தல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொதிகள் சந்தேகத்திற்கிடமானதாக காணப்பட்டதால்  சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் சோதனையிட்டபோது அவற்றில் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில்,...

 பஸ்ஸில்  போதைப்பொருட்களுடன் பயணித்த சந்தேக நபர் கைது ! 

மகும்புரவில் இருந்து காலி நோக்கி பயணித்த பஸ்ஸில் இருந்து ஹெரோயின் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் பஸ்ஸில் பயணித்த நபரொருவர்   கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் பதுளை, கனுபெலெல்ல போகஹ எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்பதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் வியாபாரி வெட்டிப் படுகொலை..!

கம்பஹா-கந்தானை பிரதேசத்தில் நேற்று(13) பகல் ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது நான்கு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது வீட்டுக்கு முன்பாக ஹயஸ் வாகனத்தில் வந்த நான்கு பேர் அடங்கிய வன்முறைக் கும்பல், மேற்படி நபர் மீது வாள்வெட்டுத்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img