Monday, June 1, 2026
No menu items!

மட்டக்களப்பு

அடையாளம் தெரியாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் நேற்றைய தினம் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்டகப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக  பொதுமக்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர். பின் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துவருவதாக...

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மாகாணமட்ட முஸ்லிம் கலாச்சார போட்டி!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மாகாணமட்ட முஸ்லிம் கலாச்சார போட்டியானது நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் Mrs. S .குலேந்திர குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்றும் ஏனைய மாவட்ட  வலயக்கல்வி பணிப்பாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோரும் இந்...

மட். திருப்பெரும்துறையில் தென்னம் தோப்பில் கொட்டப்பட்ட குப்பை மேட்டில் பாரிய தீ விபத்து!

மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதேசத்தில் தனியார் தென்னம் தோப்பு காணியில் மாநகர சபையினால் கொட்டப்பட்ட குப்பை மேட்டில் நேற்றைய தினம் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. அந்த பகுதியில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் தீ பரவியுள்ளதையடுத்து தீயணைக்கும் படையினர் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர். குறித்த பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்கு அருகிலுள்ள...

உலகிலேயே மிக நீண்ட தூரம் நடந்து சென்று முருகனை தரிசிக்கும்  பாதையாத்திரை அப்பாசாமி குழு கதிர்காமத்தை சென்றடைந்தது..!

உகந்தையில் இருந்து கதிர்காமத்துக்கான அப்பா சாமி தலைமையில்  ஆரம்பித்த பாதையாத்திரிகள் 5 நாட்கள் காட்டுவழியாக நடந்து  நேற்று வெள்ளிக்கிழமை (05) கதிர்காமகந்தன் ஆலயத்தை சென்றடைந்தனர். கதிர்காமகந்தன் ஆலய வருடாந்த கொடியேற்றத்தையிட்டு பக்தர்கள் தமது நேத்திக்கடனை செலுத்துவதற்காக யாழ்ப்பாணம் செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயம் சென்றும் அங்கிருந்து திருகோணமலையில் ஆலயங்களை தரிசித்து அங்கிருந்து...

மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த 12 நிலகண்ணிவெடிகள் அற்றி வெடிக்கவைத்து செயலிழப்பு..!

மட்டக்களப்பு விமான நிலையத்தின் எல்லையான திருப்பெரும்துறை பகுதியில் 12 நிலக் கண்ணிவெடிகளை  கண்ணிவெடி அகற்றும்  சர்வதேச நிலச்சுரங்க ஆய்வு குழுவான (எம்.ஏ.ஜி) அமைப்பினர் மீட்டெடுத்து  நீதிமன்ற அனுமதியுடன் இராணுவத்தினர் அதனை நேற்று வெள்ளிக்கிழமை (05) வெடிக்கவைத்து செயலிழக்கச் செய்தனர். யுத்தகாலத்தில் திருப்பெரும்துறை வேளாங்கன்னி தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட விமானப்படை முகாமை சுற்றி அந்த பகுதியில் ஏராளமான...

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அரசாங்க நியமனம் வழங்கக் கோரி4ஆவது நாளாக போராட்டம்!

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் 4ஆவது நாளாக வேலைநிறுத்தப் மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் (05) மேற்கொண்டு வருகின்றனர் இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டு எம்மை ஏமாற்றாதீர்கள் கிழக்கு பட்டதாரிகளை புறக்கணிக்காதீர்கள் என வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் காந்திபூங்கல்லில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை...

மட்டு சிறைச்சாலையில் ஜஸ்போதை பொருளுடன் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 8 கிராம் ஜஸ்போதை பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர்  நேற்று இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறைச்சாலையில் இரவு கடமையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தரை ஜெயிலர் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 8 கிராம் ஜஸ்போதை பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இதில் கைது செய்யப்பட்டவர்...

கல்லடி திருச்செந்தூர் ஆலய கும்பாபிஷேக நிகழ்வு!

மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வு  எதிர்வரும் 20 ம் திகதி நடைபெறவுள்ளது. இந் நிகழ்வை முன்னிட்டு இந்தியா இலங்கையில் உள்ள 21 கங்கைகளின் புனித தீர்த்தங்கள் மட்டு கல்லடி மாரியமன் ஆலையத்தில் இருந்து திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமா சந்நிதான கயிலைப்புனிதர் முதுமுனைவர் சீர்வாளர் சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகள்...

மட்டக்களப்பில் திருடிய மோட்டர் சைக்கிளை 9 மணித்தி யாலயத்தில் வாகரையில் வைத்து திருடனை கைது செய்த பொலிசார்..!

மட்டக்களப்பு நகரில் திருடிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றை சுமார் 9 மணித்தியாலயத்தில் வாகரையில் வைத்து திருடனை கைது செய்ததுடன் மோட்டர் சைக்கிளை மீட்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை (11) இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜி.கே.கஜநாயக்கா தெரிவித்துள்ளார். நகர்பகுதியில் அரச வங்கி ஒன்றின் கடமையாற்றி வரும் ஒருவர் நேற்று...

வீடு கட்டுவதற்கு அத்திவாரம் முக்கியம் அதே மாதிரி கல்வி கற்பதற்கு தன்னம்பிக்கை முக்கியம்– சாதனை படைத்துள்ள விசேட தேவையுடைய மாணவன் பாலச் சந்திரன் பிரஷேபன்

ஒரு வீடு கட்டுவதற்கு மிகவும் அவசியமானது  அத்திவாரம் அதே போன்று கல்வி கற்பதற்கு தன்னம்பிக்கை தான் அத்திவாரம் அதனை நான்  5 வயதில் இரு விழிகளை இழந்த பின்னர் ஏற்படுத்தியதால் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன். உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் சாதனை படைத்துள்ள விசேட தேவையுடைய மாணவன் பாலச்சந்திரன் பிரஷேபனே இவ்வாறு தெரிவித்தார். இரு விழிகளையும் இழந்த...
- Advertisement -spot_img

Latest News

பேருந்துக் கட்டணத்தை 32 முதல் 33 ரூபாய் வரை அதிகரிக்க கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்துக் கட்டணங்களில் இடைக்காலத் திருத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை...
- Advertisement -spot_img