Monday, June 1, 2026
No menu items!

மட்டக்களப்பு

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஜ. டேசனின் 20 வது ஆண்டு நினைவேந்தல்..!

மட்டக்களப்பில்  ஊடகவியலாளர் ஜ. டேசனின் 20 வது ஆண்டு நினைவேந்தல் தினம் . மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு தூபியில் நேற்றைய தினம்  (31) அவரின் திருவுருவ படத்திற்கு  சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந் நிகழ்வை மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை...

இந்தியா இலங்கை இரு நாடுகளின் புனித நதிகளின் தீர்தங்களுடன்; ஈழத்து திருச்செந்தூர் ஆலைய மஹா கும்பாவிஷேகம்..!

இலங்கையில் முதல் முதல் மட்டக்களப்பு கல்லடி ஈழுத்து திருச்செந்தூர் முருகன் ஆலய மஹா கும்பாபிஷேகம் இந்தியா இலங்கை இரு நாடுகளின் புனித நதிகளின் தீர்தங்களுடன் எதிர்வரும் 20ம் நடைபெறவுள்ளது. மேலும் திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமா சந்நிதான கயிலைப்புனிதர் முதுமுனைவர் சீர்வாளர் சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகள் தலைமையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடதக்கது. இலங்கை இந்தியாவிலுள்ள பல...

    சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர்கள்!!!

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்; வெல்லாவெளி பிரதேசத்தைச் சோந்த 15 வயது சிறுமி இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கடந்த 7ம் திகதி தனது வீட்டில் இருந்து அம்மம்மா வீட்டிற்கு சென்று அங்கிருந்து தனிமையில் திரும்பிய...

கடைக்குள் புகுந்த அரச பேருந்து..!

கல்முனையிலிருந்து கொழும்பு  நோக்கி பயணித்த அரச பேருந்தொன்று  செங்கலடி சந்தியில் இன்று(06) அதிகாலை  விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து செங்கலடி சந்தியிலுள்ள ரான்ஸ்போமர் தூணை உடைத்து கடையொன்றினுள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த...

பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தைக்கு விளக்கமறியல்..!

காத்தான்குடி  பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 2 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட 28 வயதுடைய நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் (30) உத்தரவிட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் திருமணம் முடித்து ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன்...

100 குடும்பக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 குடும்பக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு  மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 100 குடும்பங்களுக்கு இவ்வாறு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இந்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. குறித்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பிரதேச...

சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் மரணம்..!

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இம்முறை சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு பெரியகல்லாறு மயான வீதியில் குறித்த இரு மாணவர்களும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற நிலையில், வேகத்தினை கட்டுப்படுத்த முடியாது மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார்...

மீன்பிடி வலையில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு..!

மட்டக்களப்பு - வாழைச்சேனை, புனானி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் தான் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். புனானி, மயிலதென்ன, அத்தே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்தவர் சுகயீனம் காரணமாக வீட்டில் வேலையில்லாமல் இருந்ததாகவும், மீன்பிடிப்பதற்காக மீன்பிடி வலையை எடுத்து சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளில்...

வலம்புரிச்சங்குடன் கைது செய்யப்பட்ட பூசகர்..!

மட்டக்களப்பு நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் சட்டவிரோதமாக சுமார்  இரண்டு கோடி ரூபா பெறுமதியான இரண்டு வலம்புரிச் சங்குகளை விற்பனை செய்ய முயன்ற  பூசகர் ஒருவரை நேற்றைய தினம் (19) பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய...

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம்..!

சபாநாயகருக்கு எதிரான தீர்மானங்கள் பற்றி எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி தலைமையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக  மேலும தெரிவிக்கையில், எதிர்க்கட்சியினர் தற்போது உள்ள அரசியல் சூழலை பயன்படுத்தி தமது இருப்பினைத் தக்க வைப்பதற்காக நாடாளுமன்றத்...
- Advertisement -spot_img

Latest News

பேருந்துக் கட்டணத்தை 32 முதல் 33 ரூபாய் வரை அதிகரிக்க கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்துக் கட்டணங்களில் இடைக்காலத் திருத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை...
- Advertisement -spot_img