அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மாகாணமட்ட முஸ்லிம் கலாச்சார போட்டியானது நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் Mrs. S .குலேந்திர குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்றும் ஏனைய மாவட்ட வலயக்கல்வி பணிப்பாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இப் போட்டிகளுக்கு கிழக்கு மாகாணம் சார்ந்த பாடசாலை மாணவ மாணவிகளும் கலந்து சிறப்பித்தனர்.









