Tuesday, April 28, 2026
No menu items!

மல்வத்து ஓயா

நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகள்!

அனுராதபுரம், மல்வத்து ஓயாவின் பழைய பாலத்திற்கு அருகிலுள்ள குளியல் தளத்தில் குளித்துக் கொண்டிருந்த 54 வயது பெண்ணொருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகளால் நேற்று (09) மாலை மீட்கப்பட்டார். நேற்று (09) மாலை அந்தப் பெண் இந்த விபத்தை சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அப்போது பணியில் இருந்த உயிர்காக்கும் அதிகாரிகள் உடனடியாக...

மன்னாருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை-அச்சத்தில் மக்கள்…!

மல்வத்து ஓயா குளத்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் பெய்து வரும் குறிப்பிடத்தக்க மழை காரணமாக தந்திரிமலையிலிருந்து கீழ்பகுதியில் உள்ள ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வெங்கலச்செட்டிக்குளம், மடு, முசலை, நானாட்டான் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என திணைக்களம் விடுத்துள்ள...

திறக்கப்பட்ட நீர்த்தேக்க வான் கதவுகள்..!

நேற்று (14) பெய்த மழையினால் மல்வத்து ஓயா, வலவே கங்கை மற்றும் மகுரு ஓயா ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தொடர் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தில் இனம்தெரியாத நபரின் சடலம் மீட்பு….!

அனுராதபுரம் மல்வத்து ஓயா புதிய பாலத்திற்கு அருகில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சின்ஹ ​​தூணுக்கு அருகில் புதிய மல்வத்து பாலத்தின் கீழ் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஜெயவீரவின் மேற்பார்வையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img