அனுராதபுரம் மல்வத்து ஓயா புதிய பாலத்திற்கு அருகில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சின்ஹ ​​தூணுக்கு அருகில் புதிய மல்வத்து பாலத்தின் கீழ் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இறந்தவர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஜெயவீரவின் மேற்பார்வையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here