Friday, April 24, 2026
No menu items!

யாத்திரை

பயணங்களின் போது இருப்பிடத் தகவல்கள் அல்லது செல்ஃபிகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

சுற்றுலா, யாத்திரை அல்லது பிற பயணங்களின் போது தங்கள் இருப்பிடத்தை வெளிப்படுத்தும் செல்ஃபிகள் அல்லது சமூக ஊடகப் பதிவுகளை இடுகையிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) எப்.யூ. வூட்லர் வலியுறுத்தியுள்ளார் பத்தரமுல்லை, சுஹுருபாயவில் உள்ள காவல்துறை ஊடகப் பிரிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், இத்தகைய பதிவுகள்...

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற பெண் உயிரிழப்பு!

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்த பெண் ஒருவர் நேற்று (04) தவறி விழுந்து உயிரிழந்ததாக நல்லதண்ணி காவல்துறை தெரிவித்துள்ளது. அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தார். உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு...

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரை தொடர்பில் விசேட அறிவிப்பு!

எக்காரணம் கொண்டும் ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கு புதிய பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று காவல்துறை பொதுமக்களுக்குத் தெரிவிக்கிறது. ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நேற்று முதல் யாத்திரையில் பங்கேற்க வேண்டாம் என்று தலதா மாளிகை யாத்திரைக் குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இருப்பினும், தற்போது வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தங்கள் சடங்குகளைச்...

கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை..!

புனித தலதா மாளிகைக்கான யாத்திரை காரணமாக கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இன்று திங்கட்கிழமை முதல் 25 ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலதா மாளிகை யாத்திரைக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நாட்களின் எண்ணிக்கை நீட்டிக்கப்பட்டால், குறித்த பாடசாலைகளின் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் முப்படையினரை...

சிவனொளிபாதமலை யாத்திரையில் கலந்து கொண்ட பலர் போதைப்பொருட்களுடன் மீட்பு..!

பல்வேறு வகையான போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிவனொளிபாதமலை யாத்திரையில் கலந்து கொண்டிருந்த 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் காவல்துறையினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 14 சந்தேக நபர்களும், 25 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்கான...

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்றவர்கள் போதைப்பொருளுடன் கைது!

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற நூற்றுக்கும் அதிகமானோர் போதைப்பொருட்களுடன் கடந்த ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் . ஹட்டன் பிரதேச பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர, “போதைப்பொருளற்ற சிவனொளிபாதமலை யாத்திரை ” என்ற தொனிப்பொருளின் கீழ் வெவ்வேறு வகையிலான போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்றவர்களை கைது செய்வதற்காக தற்போது பல சோதனை நடவடிக்கைகள்...

புனித ஹஜ் யாத்திரைக்காக ஆயிரக்கணக்கான இலங்கையர்களை அனுப்ப ஒப்பந்தம்!

இந்த வருடத்திற்கான புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சவுதி அரேபியா - ஜெட்டாவில் உள்ள அசிலா விருந்தகத்தில் வைத்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த ஒப்பந்தத்தில் அந்த நாட்டின் ஹஜ் யாத்திரைக்கான பிரதியமைச்சர் அப்துல்ஃபட்டா பின் சுலைமான் மஷாட் (Abdulfattah bin Sulaiman Mashat) மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹனிதும சுனில் செனவி ஆகியோரினால் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்போது, புனித ஹஜ் யாத்திரையில் ஈடுபடுபவர்களுக்கான வசதிகள் மற்றும் யாத்திரையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

ஈரான் கால்பந்து வீரர்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை;ட்ரம்ப்

2026 உலகக் கிண்ணத்தில் ஈரான் கால்பந்து வீரர்கள் விளையாடலாம், எனினும் அவர்களுடன் ஐ.ஆர்.ஜி.சி. (இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை) அமைப்புடன் தொடர்புடைய எவரும் பங்குபற்ற முடியாது...
- Advertisement -spot_img