அக்கராயன் குளத்தின் பின் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!
முல்லைத்தீவு ஐயங்கன் குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காட்டுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்றுப் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான அக்கராயன் குளத்தின் பின் பகுதியிேலேயே மீட்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சடலம் யாருடையது என அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஐயங்கன் குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



![]()