Tamil News Channel

ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரையுடன் யுவதி ஒருவர் கைது…!

kaithu

ஐஸ் போதைப்பொருள் மற்றும்  போதை மாத்திரை விற்பனையில்  ஈடுபட்ட  யுவதியினை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால்  மொரட்டுவை லுனாவ பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே  குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த வீட்டில் இருந்து 80 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 500 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக  கைதுசெய்யப்பட்ட யுவதி மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts