கா/பொ/த சாதாரண தரப் பரீட்சையில் கிளிநொச்சி மகாவித்தியாலயம் மாவட்டத்தில் முதலிடம்!

0
8

2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட இரண்டு கல்வி வலயங்களில் செயல்படும் அனைத்து பாடசாலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, கிளிநொச்சி மகாவித்தியாலயம் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த பள்ளியில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் பலர் சிறந்த வெற்றிகளைப் பெற்றுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க வகையில் 23 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளனர். இது இந்த பாடசாலையின் உயர்ந்த கல்வித் தரத்தையும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டுகிறது.

சிறப்பான பெறுபேறுகள் விபரம்:

  • 9A பெற்ற மாணவர்கள் – 23 பேர்
  • 8A பெற்ற மாணவர்கள் – 16 பேர்
  • 7A பெற்ற மாணவர்கள் – 8 பேர்
  • 6A பெற்ற மாணவர்கள் – 14 பேர்
  • 5A பெற்ற மாணவர்கள் – 7 பேர்

மொத்தமாக 225 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், 220 பேர் சித்தியடைந்துள்ளனர். இதில் 68 பேர் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர் என்பது இப்பாடசாலையின் வெற்றியை மேலும் வலியுறுத்துகிறது.

இந்தப் பெறுபேறு கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் கல்வித் தரத்தையும், அதன் கல்வி மேம்பாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது.

(கிளிநொச்சி நிருபர் பரமசிவம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here