கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள ஆசிரியர் விடுதியில், ஆசிரியர் ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.
இறந்தவரின் உடல் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







