கிளிநொச்சி வசந்த நகர் பகுதியைச் சேர்ந்த 04 சிறுவர்கள் நேற்றைய தினம் 29.06.2024 கிளிநொச்சி இரணைமடு குளத்தில் நீராட சென்ற சமயம் அதில் ஒரு சிறுவனை காணவில்லை.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது திருமுருகண்டி வசந்த நகர் 14 செல்வரத்தினர் துசாந்தன் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போய் உள்ளார்.
மேலும் பொதுமக்கள் பொலிஸார் மற்றும் பொது அமைப்புகள் அனைவரும் இணைந்து தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.