சர்வதேச நீதிமன்றத்தின் மீது குற்றம் சாட்டும் இஸ்ரேல் ஜனாதிபதி

இஸ்ரேலுக்கு எதிரான தென்னாபிரிக்காவின் வழக்கில், பலஸ்தீனியர்களைப் பாதுகாக்கவும், காசா பகுதியில் இனப்படுகொலையைத் தடுக்கவும் இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. உலக நீதிமன்றம் தனது வார்த்தைகளை தவறாக சித்தரித்ததாக இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28)  குற்றம் சாட்டியுள்ளார்.

காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வொன்றில் பங்கேற்று, உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் இனப்படுகொலைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி தென்னாபிரிக்கா தாக்கல் செய்த மனு சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து, காசாவில் இனப்படுகொலைகள் இடம்பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பலஸ்தீனியர்களுக்கு எதிரான தூண்டுதல் மற்றும் மனிதாபிமானமற்ற வார்த்தைகளுக்கு ஆதாரமாக இஸ்ரேலிய தலைவர்களின் தொடர்ச்சியான அறிக்கைகளை நீதிமன்றத்தின் தீர்ப்பு மேற்கோள் காட்டியது.

இந்த வழக்கு தொடர்பில், இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் முன்வைத்த கருத்துக்கள் சர்வதேச நீதிமன்றத்தால் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“ஒரு ஆதாரமற்ற சட்ட வாதத்தை ஆதரிக்கும் நோக்கத்துடன், மிக மிக பகுதி மற்றும் துண்டு துண்டான மேற்கோள்களைப் பயன்படுத்தி, அவர்கள் என் வார்த்தைகளைத் திரித்த விதம் எனக்கு வெறுப்பூட்டியது” என்று ஹெர்சாக் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

அத்துடன், தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் குறித்த நடவடிக்கையை சர்வதேச நீதிமன்றம் முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hot this week

வானியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: ரூபின் ஆய்வகம் முதல் படங்களை வெளியிட்டது!

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஆற்றல் துறை (DOE)...

தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையில்லை!

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான்...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான...

Topics

வானியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: ரூபின் ஆய்வகம் முதல் படங்களை வெளியிட்டது!

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஆற்றல் துறை (DOE)...

தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையில்லை!

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான்...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான...

சமாதானம் காணும் முன் வீழ்ந்த உயிர்கள் – இஸ்ரேலின் தாக்குதலில் 10 IRGC வீரர்கள் பலி!

ஈரானின் யாசுது மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இத் தாக்குதலில்,...

மௌனமான அதிகாலையில் துப்பாக்கியின் சத்தம் – காலியில் பரபரப்பு!

காலி - அக்மீமன பகுதியில் அமைந்துள்ள வெவேகொடவத்தை பகுதியில் இன்று அதிகாலை...

“நம்பிக்கையின் நடுவே நாசம்!” – சிரியாவை அதிர வைத்த ஜெபத்தின் போது நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதல்!

சிரியா, டமாஸ்கஸ் நகரின் புறநகரான டுவெய்லா பகுதியில் மார்இலியாஸ் கிரேக்கம் உர்தோடாக்ஸ்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img