January 13, 2026
 செல்பி மோகத்தால் உயிரிழந்த இளைஞர்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

 செல்பி மோகத்தால் உயிரிழந்த இளைஞர்..!

Feb 16, 2024

 செல்பி எடுக்கச் சென்ற இளைஞர் ஒருவரை சிங்கம் கடித்து கொன்ற சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இச் சம்பவமானது திருப்பதி மலை அடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் இடம்பெற்றுள்ளது.

இவ்  பூங்காவில் சிங்கங்கள் இருக்கும் பகுதியில் செல்பி எடுப்பதற்காக குறித்த இளைஞர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி குதித்து உள்ளே சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த சிங்கம் ஒன்று, அவர் மீது பாய்ந்து  கடித்துக் குதறியதுடன்  கழுத்தைப் பிடித்து கடித்துக் கொடூரமாக கொன்றுள்ளதாக அங்கிருந்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில்   தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு, உயிரியல் பூங்கா ஊழியர்களிடம் விசாரணையை  மேற்கொண்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *