Tamil News Channel

திருகோணமலையில் கைதான காவல்துறை அதிகாரி

ice drugs 1

ஐஸ் போதைப்பொருளை கைமாற்ற முயன்ற யாழ். கோப்பாய் காவல் நிலைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்றையதினம்(11) இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் அவரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் அவர் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றிருந்தார்.

இதன்போதே அவர்  திருகோணமலை  பகுதிக்கு சென்று போதைப்பொருளினை கைமாற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts