பாகிஸ்தான் உயர் ஸ்தானிகருக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையே சந்திப்பு!
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம் உல் அஜீஸ் எச்.ஐ (எம்) (Major General (Retd) Faheem Ul Aziz HI (M)) இலங்கை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்தார்.
இச் சந்திப்பானது நேற்று முன்தினம் (07.08) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
இதில் நீண்டகால சமூக, பொருளாதார, கல்வி, விளையாட்டு மற்றும் அரசியல் உறவுகள், சுகாதாரம், சுதேச மருத்துவம் அத்துடன் சுற்றுலா மற்றும் மருத்துவ சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளின் எதிர்கால வளர்ச்சி குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் இரு நாடுகளின் கலாச்சார விடயங்களை உள்ளடக்கிய ஊடக நிகழ்ச்சிகளின் பரிமாற்றம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை பரிமாறிக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது.
பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கைக்கு உறுதியான ஆதரவை வழங்கும் என்று பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் உறுதியளித்தார்.
கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது, மேலும் தற்போது பாகிஸ்தானில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு மருத்துவக் கல்விக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது, மேலும் மாணவர்களுக்கு சிறந்த தொழிற்கல்வி பயிற்சியை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வலுவான உறவு மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துறை துணை அமைச்சர் டாக்டர்ஹன்சகா விஜேமுனி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சின் செயலாளர்டாக்டர் அனில் ஜாசிங்க மற்றும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தைப்பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]()