பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை; நள்ளிரவில் பயங்கரம்..!
நாடாளவிய ரீதியில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடும் கும்ப்பல் குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக வாகனங்களின் உதிரி பாகங்களை திருடுவதிலே இக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செல்லப்பிராணிகளுக்கு விஷம் கொடுத்து குறித்த கும்பல் இந்த திருட்டில் ஈடுபடுவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளதுடன், இந்த கும்பல்களை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
![]()