யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் விதமாக செயற்பட்டமையால் கடந்த திங்கட்கிழமை (04) கைது செய்யப்பட்டார்.
கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் தற்போது கடமையாற்றி வரும் , யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (05) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான , ஆள் பிணையில் செல்ல நீதி மன்றம் அனுமதியளித்துள்ளது.
இதற்கான வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படடுள்ளது.