பதுளை மற்றும் ஹாலி-எல ரயில் நிலையங்களுக்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை  (29) சேவையிலிருந்த ரயில் தடம் புரண்டதால், மலையக  ரயில்  சேவைகள்  தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி  ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொடிமனிக்கே ரயிலின் என்ஜின் பகுதியும் பின்பெட்டியுமே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் நிலவும் மோசமான காலநிலை மற்றும்  ரயில்ப்பாதையில் சேறும் சகதியுமாக காணப்படுவதால், ரயில்வே போக்குவரத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே  கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here