November 18, 2025
வாக்குமூலத்திற்காக CID இல் ஆஜரான ஜெரோம் பெர்னாண்டோ
News News Line Top இலங்கை அரசியல் புதிய செய்திகள்

வாக்குமூலத்திற்காக CID இல் ஆஜரான ஜெரோம் பெர்னாண்டோ

Nov 30, 2023

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று (30) காலை ஆஜராகியுள்ளார்.

பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு சிங்கப்பூர் சென்ற அவர், நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சிங்கப்பூர் சென்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டிருந்த நீதிமன்றம், பின்னர் அவர் இலங்கை வரும் போது கைதுசெய்ய வேண்டாமெனவும் நாட்டுக்கு வருகை தந்து 48 மணிநேரத்தில் அவர் வாக்குமூலமொன்றை வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *