யாழ்ப்பாணம் மாவட்டம் நீதிமன்ற நீதிபதி அ.அ.ஆனந்தராஜா முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதிவானாக லயன் அ.பிரபாகரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தின் அலுவலரும், யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தின் சேவைத் திட்ட தலைவருமான இவர் பல்வேறு சமூக நலத்திட்டங்களையும் பல சேவைகளையும் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.







