தேசிய வரவுசெலவுத் திட்ட திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் பதவியில் பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அலுவலர் கே.ஜி.பி. புஸ்பகுமாரவை அச்சக திணைக்களத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்துக்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது.
அரச அச்சக திணைக்கள தலைவராக சேவையாற்றும் ஜி. கே.டி.லியனஹேவின் சேவைக்காலம் 2024.12.24 திகதி முடிவடைந்துள்ள நிலையிலேயே அந்த பதவி வெற்றிடத்துக்கு இந்த நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.







