Monday, July 27, 2026
No menu items!

அமைச்சரவை அங்கீகாரம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய உள்ளக விளையாட்டரங்கு அமைக்க அமைச்சரவை ஒப்புதல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் உள்ளக விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்வதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக, பாடசாலைகளிலும் விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து, டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து மற்றும் சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்யும்...

தொடருந்துத் திணைக்களத்தின் முக்கியப் பதவிகளுக்கு பெண்கள் ஆட்சேர்ப்பு!

165 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இலங்கை தொடருந்துத் திணைக்களத்தில், முக்கிய பதவிகளுக்கு பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, தொடருந்து இயந்திர சாரதிகள், தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள், நிலையப் பொறுப்பதிகாரிகள், மற்றும் தொடருந்து மேற்பார்வை முகாமையாளர்கள் போன்ற முக்கியப் பதவிகளில் பெண்கள் நியமிக்கப்படவுள்ளனர். தொடருந்துத் திணைக்களம் தொடங்கியதிலிருந்து, மேற்பார்வை முகாமையாளர் பதவியைத் தவிர, (அந்தப் பதவியில் 2012...

விசேட அதிரடிப் படைக்கு புதிய வாகனங்கள் – 100 உந்துருளிகள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகள் கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

விசேட அதிரடிப் படையினருக்காக 100 உந்துருளிகள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது நாடு முழுவதும் செயல்பட்டு வரும் விசேட அதிரடிப் படையின் கீழ் 76 பிரதான முகாம்கள், 23 உப முகாம்கள் மற்றும் 14 விசேட பிரிவுகள் உள்ளன. அந்தப்படையினரிடம் தற்போது பயன்பாட்டில் உள்ள 314 உந்துருளிகளில் சுமார்...

மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக்  கருத்திட்டங்களை இடைநிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மீள்துப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான காற்று ஆற்றல்வளம் கொண்ட பிரதேசமாக அடையாளங் காணப்பட்டுள்ள மன்னார் தீவில் மூன்று (03) காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. குறித்த கருத்திட்டங்களில் ஒரு கருத்திட்டமான தம்பவனி...

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு சர்வதேச கல்வி ஒத்துழைப்பு – நான்கு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கல்வி ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் நான்கு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது, இலங்கைப் பல்கலைக்கழகங்களை உலகத் தரப்படுத்தல் சுட்டிகளுக்கு மேம்படுத்தி சர்வதேசமயப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த யோசனையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் செயல்படும் கௌரவ பிரதமர் அவர்கள்...

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபையை நிறுவ அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபையை நிறுவுவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் . அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நடைமுறையிலுள்ள தகவல் மற்றும் தொடர்பாடல் முகவராண்மை நிறுவனத்தினை (ICTA) இரத்துச் செய்து டிஜிட்டல்...

அனைத்து வகையான வங்கிக் கணக்குகளையும் திறப்பதற்கு வரி அடையாள எண்(TIN) கட்டாயம்!

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கான தக்கவைப்பு வரி மற்றும் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கான வரி அடையாள எண் (TIN) தொடர்பான விதிகள் தொடர்பான 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் சட்டத்தில் திருத்தங்களை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 01, 2025 முதல் அமுலுக்கு வரும் வகையில்,...

புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நியமிப்பு!

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு , இலங்கை கல்வி நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி ஏ.கே.சுபாசினி இந்திகா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய எச்.ஜே.எம்.சி.ஏ. ஜயசுந்தரவின் சேவைக்காலம் கடந்த 6 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், வெற்றிடமாகவுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.கே.சுபாசினி இந்திகா குமாரி...

தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொள்கை அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்!

"ஒரு வளமான நாடு - ஒரு அழகான வாழ்க்கை" என்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொள்கை அறிக்கையை அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்கை நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது, 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 120 பில்லியன் டாலர்களாக இலக்காகக் கொண்டது,...

குற்றப் பிரிவுகளை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

மாகாண மட்டத்தில் குற்றப் பிரிவுகளை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த பிரிவுகள் அமைக்கப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இந்த பிரிவுகளை ஸ்தாபிக்கும் பணிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரிவுகளுக்கான அதிகாரிகளை நியமிப்பதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கு தேவையான...
- Advertisement -spot_img

Latest News

தெவிநுவர பெரஹராவில் காவடி நடனத்தை நீக்குமாறு பரிந்துரை

தெவிநுவர ஸ்ரீ உத்பலவன்ன விஷ்ணு தேவாலயத்தின் வரலாற்று சிறப்புமிக்க பெரஹராவில் இடம்பெறவுள்ள காவடி நடன பகுதியை நீக்குமாறு பொலிஸார் பரிந்துரை செய்துள்ளனர். எதிர்வரும் ஜூலை 28 ஆம்...
- Advertisement -spot_img