கணேமுல்ல சஞ்சீவவின் உடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இறுதிச் சடங்குகள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
சஞ்சீவவின் உடலை அடக்கம் செய்வதற்கு நேற்று (20/02/2025) கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், கணேமுல்ல சஞ்சீவவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.






