அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்று சேரவேண்டும் என வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று (6/4/2025) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போது கடலில் சட்டவிரோத தொழிலான ஒளிபாய்ச்சி மீன்பிடி அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த நீரியல் மற்றும் கடற்றொழில அமைச்சு, கடற்படை நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டிய நா.வர்ணகுலசிங்கம், தொடர்ந்தும் ஆட்சியில் வரும் அரசாங்கங்கள் மக்களை ஏமாற்றி வருவதாகவும், இதனை எதிர்கொள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைநது போராட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]








