அரசாங்க சேவையில் உள்ள 30,000 அத்தியாவசிய வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனையின் கீழ், அரச ஊழியர்களுக்கான நியாயமான அடிப்படை சம்பள அதிகரிப்புக்கான திட்டங்களை முன்வைக்கவும், ஓய்வூதியதாரர்களின் சம்பள முரண்பாடுகளை மூன்று ஆண்டுகளுக்குள் முடிவுக்குக் கொண்டுவரவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இது தொடர்புடைய நிதி ஒதுக்கீடு செய்வதற்கான திட்டங்கள் சமர்ப்பிக்கப்படும்.
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் பொது சேவைக்கான துல்லியமான தரவு அமைப்பைத் தயாரிக்க ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
தற்போதுள்ள அரச பொது சேவையில் பொதுமக்கள் திருப்தி அடையாததால், அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் பொது மக்களுக்கு திறமையான சேவைகளை வழங்க அரசாங்கம் நம்புகிறது.








