முன்னாள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று கேட்டபோது, கலாநிதி ராஜபக்ஷ அந்த யோசனையை உறுதியாக நிராகரித்தார்.
நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஊழல்வாதிகள் என்று குறிப்பிடப்பட்ட கதையின் ஒரு பகுதியாக இருக்க தனக்கு விருப்பமில்லை என்று அவர் கூறியுள்ளார்.








