யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமதானுக்கு பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (24) நடவடிக்கை எடுத்துள்ளது.
கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு செய்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குக்கு அவர் ஆஜராகாததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை என்பதோடு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அவரது பிணையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.







