இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பத்தரமுல்லவில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவுத்தூபிக்கு சனிக்கிழமை (5) தனது அஞ்சலிகளை செலுத்தினார்.

இதுதொடர்பில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், கொழும்பில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவுத் தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன். இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு, ஐக்கியம் மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கான உயர்பணியில் தமது வாழ்வை தியாகம் செய்த இந்திய அமைதிகாக்கும் படையின் துணிச்சல் மிக்க வீரர்களை இச்சந்தர்ப்பத்தில் நாம் நினைவுகூர்கிறோம். அவர்களின் அசைக்க முடியாத தைரியமும், அர்ப்பணிப்பும் நம் அனைவரினதும் உத்வேகத்தின் ஆதாரமாக நிலைத்திருக்கின்றன”  என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here